பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அதிரடித் தீர்மானம்

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அதிரடித் தீர்மானம்

எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட அனைத்து தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் பணிகளில் இருந்து விலகிக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது பொது சுகாதார ஆய்வாளர்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளை பொது சுகாதார அமைச்சு கவனத்திற் கொள்ளவில்லை என தெரிவித்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

அத்தோடு, 29ஆம் திகதியில் இருந்து தேர்தல் கடமைகளில் இருந்தும் இடைவிலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.