தேர்தல் வேட்பாளர்கள் குறித்து தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் குற்றச்சாட்டு

தேர்தல் வேட்பாளர்கள் குறித்து தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் குற்றச்சாட்டு

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பழைய சம்பவங்கள் குறித்து பேசுகின்றனர் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் மாத்திரம் வேட்பாளர்கள் கவனம் செலுத்துகின்றார்கள் என்றால், அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றார்கள் என்பதே அர்த்தம் என அந்த நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆட்டநிர்ணய சதி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கருத்தில் எடுத்தால் அது ஒன்பது வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளவர் அமைச்சராக அவ்வேளை பணியாற்றிய போதிலும் அமைதியாகயிருந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அறிக்கைகள் அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு கொரோனா வைரஸ் ஆபத்தினை எதிர்நோக்கியிருக்கும் இந்த தருணத்தில் அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய விடயங்களில் கவனத்தை செலுத்தி அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.