வீதி விபத்தில் உயிரிழந்த பெண்..

வீதி விபத்தில் உயிரிழந்த பெண்..

நாத்தன்டிய உடுபத்தாவ வீதி துன்னிரிபிடிய பிரதேசத்தில் உந்துருளி ஒன்று பாரவூர்த்தியுடன் மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. உந்துருளியில் இருவர் பயணித்துள்ள நிலையில் உந்துருளியினை செலுத்திய பெண் காயமடைந்து மாரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.