இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மாகாணங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.