2019ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான செய்தி

2019ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான செய்தி

கல்விப் பொதுத்தராரா சாதாரண தரப் பரீட்சை 2019 ஆண்டுக்கான முடிவுகளின் சான்றிதழை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான வசதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் விரிவுபடுத்தியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சும், கல்வி அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய பொதுமக்கள் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை பரீட்சை திணைக்களம் இந்த ஒன்லைன் சேவையை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.