மகிந்தானந்த அழுத்கமகேவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்..!

மகிந்தானந்த அழுத்கமகேவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்..!

கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி பணத்திற்காக விற்கப்பட்டது என அப்போதைய விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். விளையாட்டு துறையில் ஏற்படும் பிழைகள் தொடர்பில் ஆராயும் சிறப்பு பணிக்குழுவிடம் இந்த கொரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.