அரச வங்கி ஒன்றில் நடந்த கொடூர சம்பவம்..!

அரச வங்கி ஒன்றில் நடந்த கொடூர சம்பவம்..!

வாதுவ பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர்  மீது கத்தியால் தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் வங்கிக்கு வருகை தந்த போது, வங்கி உத்தியோகத்தருடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் காயமடைந்த உத்தியோகத்தர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. வாதுவ காவற்துறை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.