ஊரடங்கு உத்தரவு தொடர்பில் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை

இன்று இரவு (4) 10 மணி தொடக்கம் சனிக்கிழமை (06) அதிகாலை 5.00 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் காவல் அரண்கள் அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீட்டிலிருந்தோ அல்லது தங்குமிடத்தில் இருந்தோ வெளியே செல்லுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.