மனைவி வெளிநாட்டில்; யாழில் தூக்கில் தொங்கிய இளம் குடும்பஸ்தர்

மனைவி வெளிநாட்டில்; யாழில் தூக்கில் தொங்கிய இளம் குடும்பஸ்தர்

யாழ்ப்பாணம் - மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

23 வயதான சி.வினோதன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவருடைய மனைவி வெளிநாடொன்றில் வசித்து வரும் நிலையில் இச் சம்பவம் மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.