இரண்டு மாத குழந்தை மரணம்! சந்தேகத்தின் பேரில் பெற்றோர் கைது

இரண்டு மாத குழந்தை மரணம்! சந்தேகத்தின் பேரில் பெற்றோர் கைது

பேலியகொடை நுகே வீதியில் உள்ள வீடொன்றில் பிறந்து இரண்டு மாதங்களே ஆன குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோரை பேலியகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது இறந்து காணப்பட்டதுடன்,மரணம் தொடர்பான சந்தேகம் காரணமாக விசாரணை நடத்த பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தம்பதியினர் வசித்து வந்த வீட்டுக்கு அருகில் உள்ளவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளவும் இடத்தை பரிசோதனை மேற்கொள்ளவும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

இறந்த குழந்தையின் பெற்றோர் பேலியகொடை நுகே வீதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளதுடன்,அந்த குழந்தைக்கு பிறப்பத்தாட்சி பத்திரமும் பெறப்படவில்லை.

அத்துடன் குழந்தைக்கு பெயரும் சூட்டப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்