மறு அறிவித்தல் வரை நுவரெலியாவிற்கு பயணிக்க வேண்டாம்! முக்கிய அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை நுவரெலியாவிற்கு பயணிக்க வேண்டாம்! முக்கிய அறிவித்தல்

மறு அறிவித்தல் வரும் வரையிலும் நுவரெலியா மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வார இறுதி மற்றும் அடுத்த வரும் தினங்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நிலைமையில். நுவரெலியா கிரகறி குள பூங்கா, விக்டோரியா பூங்கா, சந்த தென்ன உட்பட சுற்றுலாத் தலங்கள் மற்றும் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.