கையொப்பம் இட்டார் சபாநாயகர்! அமுலாகிறது 20ஆவது திருத்தச் சட்டம்

கையொப்பம் இட்டார் சபாநாயகர்! அமுலாகிறது 20ஆவது திருத்தச் சட்டம்

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன 20ஆவது திருத்தச் சட்டத்தில் கையொப்பமிட்டதை அடுத்து இன்றிலிருந்து அச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

கடந்த 22ம் திகதி 20ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் இந்த 20ம் திருத்தச் சட்ட வரைவு, சட்டவாக்கல் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சபாநாயகரிடம் இன்றைய தினம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து 20ம் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்றைய தினம் கையொப்பமிட்டார்.

இதன்படி, 20ம் திருத்தச் சட்டம் இன்றைய தினம் முதல் அமுலாகின்றது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.