பூட்டப்பட்ட வீட்டிலிருந்து நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

பூட்டப்பட்ட வீட்டிலிருந்து நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியா - காத்தார்சின்னகுளம் நாலாம் ஒழுங்கை பகுதியிலுள்ள பூட்டப்பட்ட வீட்டிலிருந்து நபரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் சந்தேகத்தில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் சடலமாக இருப்பதை அவதானித்துள்ளனர்.

 

 

சடலமாக மீட்கப்பட்டவர் 30 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவருவதுடன், அவர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தடயவியல் மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.