சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

சர்வதேச ரீதியில் நேற்றைய நாளில் மாத்திரம் 3 இலட்சத்து 79 ஆயிரத்து 78 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள், இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 87 இலட்சத்து 27 ஆயிரத்து 892ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், சர்வதேச ரீதியில் நேற்றைய நாளில் மாத்திரம் 6 ஆயிரத்து 60 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதன் அடிப்படையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்து 96 ஆயிரத்து 300 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 2 கோடியே 91 இலட்சத்து 10 ஆயிரத்து 959 ஆக பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.