கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்த நபர் மரணம்! கொழும்பில் சம்பவம்

கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்த நபர் மரணம்! கொழும்பில் சம்பவம்

கிருலப்பனையில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்த நபர் உயிரிழந்துள்ளார். 84 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இருந்து விழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது ஒரு தற்கொலை அல்லது இயற்கையான மரணமா என்பதை அறிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் கொழும்பு 6 பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் களுபோவிலை வைத்தியசாலையில், வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.