மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் 550 முறைப்பாடுகள்..!

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் 550 முறைப்பாடுகள்..!

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு கடந்த 5 அரை மாதங்களில் 800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 550 முறைப்பாடுகள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பானது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்ழுவானது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதன்படி, தொடர்ந்து மின்கட்டணங்களில் சிக்கல் நிலை ஏற்படுமாயின் இலங்கை மின்சார சபை மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவில் தெரிவிக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.