நினைவு வெளியீடுகள்.

யாழ்ப்பாண கலாச்சாரத்தில் ஒருவரின் மறைவிற்குபின்னர் அவரின் 31ம் நாள்
நிறைவு நிகழ்வின் போது நினைவு மலர் வெளியிட படுவது

பாரம் பரியமாக பின்பற்ற படுகிறது

திதி நிர்ணயம் வெண்பாவிலும் வரலாறு அகவற்பாவிலும் புலம்பல்
விருத்தப்பாவிலும் எழுதப்படுதல் மரபு

இம் மரபு தற்போது மீறப்பட்டு வசன நடையில் எழுதப்படுவதும் உண்டு எது
எவ்வாறு இருப்பினும்

மிகுந்த பொருட்செலவில் வெளியிடப்படும் இவ் வெளியீடுகள் அனேகமானோர்களால்
படிக்கப்படாமலே போடப் படுகின்றன. உறவினர்கள் தங்கள் பெயர் இருக்கிறதா
என்ற தேடலுடன் நிறைவடைகின்றனர்

எனவே இந்நினைவு வெளியீடுகள் மற்றையோருக்கு பயன்படதக்கதாக இருக்க வேண்டும்
என நினைப்பது தவறுஇல்லை. இத்தகைய சிந்தனையில் அண்மைக்காலமாக
நினைவுவெளியீடாக சில இலக்கிய படைப்புக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இவ்வகையில்

யாழ்ப்பாண மாட்டுவண்டிச்சவாரி-

(அமரர் சீனியர் கிருஸ்ணபிள்ளை நினைவு வெளியீடு)

புதுமைக்கவிதைகள்

அமரா்.பெரியார் சரவணை வெளியீடு (தொகுப்பு சித்தாந்தன் ரமேஸ் கேதீஸ்வரன் )

நினைவில் இருந்து சொற்களுக்கு அமரர் ஆனந்தமயில் நினைவு வெளியீடு

போன்ற வெளியீடுகளும்

கவிஞா் சு.குணேஸ்வரனால் தொகுக்கப்பட்ட

அம்மா தேர்ந்த கவிதைகள்

பொன்னுத்துரை இராசம்மா நினைவு வெளியீடு

வெளிநாட்டு கதைகள் இராசையா தவமணி வெளியீடு

கிராமத்து வாசம்

குழந்தைப்பாடல்கள் ம.சின்னத்தம்பி நினைவு வெளியீடு

தேர்ந்த குறுங்கதைகள்

போன்ற நூல்களையும் குறிப்பிடலாம். இதே போன்று பொருளாதார வசதியீனம்
காரணமாக ஒரு நூலைத்தானும் வெளியிட முடியாமல் இருக்கின்ற நல்ல
எழுத்தாளரின் நூல்களை தனது அன்புக்குரியவர்களின் நினைவாக வெளியிட்டு
தமிழ் இலக்கிய உலகம் வளம் பெற உதவலாம்.

இதன் மூலம் அவர்கள் இலக்கியங்களின் ஊடாக அன்பானவர்களின் நினைவு
பேணப்படும் அல்லவா எனவே இத்தகைய பயனுள்ள முயற்சிகள் தொடர வேண்டும்.

வேலணையூர்-தாஸ்

Special Recent Posts

மார்பகத்தின் அளவை குறைப்பதற்கான இயற்கை வழிகள்!!!

மார்பகத்தின் அளவை குறைப்பதற்கான இயற்கை வழிகள்!!!

May 25th, 2013

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. அதில் முக்கியமானது தான் மார்பகங்கள் மிகவும் பெரியத[...]

பெண்களுக்கு பிடித்த “ஹாட் பாய்” போல் இருப்பதற்கான சில டிப்ஸ்…

பெண்களுக்கு பிடித்த “ஹாட் பாய்" போல் இருப்பதற்கான சில டிப்ஸ்...

May 25th, 2013

பெண்கள் உங்களைப் பற்றி பேசுவதில்லை என்று கவலைப்படுகிறீர்களா? அவர்களிடம் நெருங்குவதற்கு ஆசையிருந்தும்[...]

ஆந்திராவில் அனல் காற்றுடன் கடும் வெயில் : ஒரே நாளில் 293 பேர் பலி?

ஆந்திராவில் அனல் காற்றுடன் கடும் வெயில் : ஒரே நாளில் 293 பேர் பலி?

May 25th, 2013

ஆந்திராவில் அனல் காற்றுடன் கொளுத்தும் வெயிலால் ஒரே நாளில் 293 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகிய[...]

பிரபல பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் காலமானார்!

பிரபல பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் காலமானார்!

May 25th, 2013

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை சென்னையில் [...]

கோப்பாய்யில் 3000 கிலோகிராம் இரும்புகள் திருட்டு

கோப்பாய்யில் 3000 கிலோகிராம் இரும்புகள் திருட்டு

May 25th, 2013

யாழ், கோப்பாய் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 கிலோகிராம் இரும்புகள் திருடப்பட்[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*