பணிபுரியும் இடத்தில் பெண்களின் கவனத்திற்கு…..

இன்று பணிபுரியும் இடத்தில் உங்களுக்கும், சிலரும் கூட ஆண்களால் சில அனுபவங்களைப் பெற்றிருக்கலாம்; சிலர் சமாளித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இதற்காக எல்லாம் வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருக்கும் நிலையில் இன்றைய பெண்களும் இல்லை. பொருளாதார சூழ்நிலையும் இல்லை. சரி இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிப்பது எப்படி?

* ஆபாசமாக பேசுவது, பாட்டு பாடுவது, அருவருக்கத்தக்க அல்லது விரும்பத்தகாத புத்தகம் அல்லது படங்களை கொடுப்பது போன்றவையும் பாலியல் தொந்தரவுகளே. எனவே, இதுகுறித்து கவனமாக இருங்கள். உங்களிடம் இப்படி யாராவது நடந்து கொள்வதாக தெரிந்தால், அவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் விலகி இருங்கள்.

* சக ஆண் ஊழியர்கள் உங்கள் உடைகள், உடல், அழகு பற்றிப் பேசினால், முதல் பேச்சிலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். அதை நீங்கள் ஏற்கும் பட்சத்தில், ஒருவேளை, பேச்சு மேலும் மேலும் தொடர்ந்து, ஒரு நாள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அல்லது அவற்றை நீங்கள் ஏற்கும் போது, சம்பந்தப்பட்ட நபரே அதற்கு நீண்ட நாக்கு, மூக்கு முளைத்து பூதமாக்கிவிடலாம். எனவே, இவற்றை ஜஸ்ட் லைக் தட் என்று எடுத்துக் கொள்ளாமல் சற்று உஷாராக இருங்கள்.

* சில பெண்கள் தாங்களாகவே, சில சங்கடங்களை உருவாக்கிக் கொள்வர். உதாரணமாக, ஜோவியல் பேர்வழி என்று கூறிக் கொண்டு வரையறை இன்றி, பல விஷயங்களைப் பற்றி சக ஆண் ஊழியர்களிடம் பேசும் போது, அவர்களும் அதற்கேற்றவாறு தங்கள் எல்லைகளை விரித்துக் கொள்ளலாம். அப்படி நீங்கள் பேசிவிட்டு அவர்களைக் குறை கூறுவதில் நியாயமில்லை. எனவே, நீங்கள் சக ஆண் அலுவலர்களிடம் பேசும் போது,அதற்கான வரையறையை சரியாக வகுத்துக் கொள்ளுங்கள்.

* இப்படியெல்லாம் நீங்கள் கவனமாக இருந்தும் பிரச்னை உங்களை தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட நபரிடம், அவரது செய்கை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை தெரியப்படுத்த தயங்காதீர்கள். அப்படியும் பிரச்னை தொடந்தால், உங்கள் உயரதிகாரியிடம் புகார் அளிக்க தயங்காதீர்கள்.

Special Recent Posts

மதுவினால் உண்டாகும் தலைபாரத்தை குறைக்கும் 9 எளிய வழிகள்!!!

மதுவினால் உண்டாகும் தலைபாரத்தை குறைக்கும் 9 எளிய வழிகள்!!!

May 22nd, 2013

மது அருந்துவது என்பது ஒரு இயல்பாகவே பல பேர் மத்தியில் ஆகிவிட்டது. அதனால் கிடைக்கும் ஆனந்தத்தை பற்றி [...]

சமையலறை குழாய் அடிக்கடி அடைக்குதா? அப்ப இத படிங்க…

சமையலறை குழாய் அடிக்கடி அடைக்குதா? அப்ப இத படிங்க...

May 22nd, 2013

வீட்டை சுத்தம் செய்ய ஆசைப்பட்டால், வீட்டின் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். அவற்[...]

அனன்யா தமிழில் நடிக்க காரணம் இதுதான்…

அனன்யா தமிழில் நடிக்க காரணம் இதுதான்...

May 22nd, 2013

மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறார் திருமதி அனன்யா. டைட்டிலில் 'அனன்யா ஆஞ்சநேயலு' என்று போடுவ[...]

குளிர்பானத்துடன் மயக்க மருந்து கொடுத்து பணம் பொருட்கள் கொள்ளை! பதுளை தபால் ரயிலில் சம்பவம்!

குளிர்பானத்துடன் மயக்க மருந்து கொடுத்து பணம் பொருட்கள் கொள்ளை! பதுளை தபால் ரயிலில் சம்பவம்!

May 22nd, 2013

இரவு ரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்த இ.போ.ச. உத்தியோகத்தருக்கு குளிர்பானத்துடன் மயக்க மருந்தினைக் [...]

2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!

2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!

May 22nd, 2013

வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப்[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*