ஒலிம்பிக் போட்டி இலண்டனில் கோலாகலமாகத் தொடங்குவதற்கு இன்னமும் 11 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இலண்டன் விமான நிலையத்தில் இருந்து தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 8 மர்ம நபர்கள் ஊடுருவியுள்ளதாக இலண்டனின் சன் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
இதற்குக் காரணம் விமான நிலையத்தில் பனி புரியும் பாதுகாப்பு அதிகாரிகள் பற்றாமையும் அங்கு வேலை செய்பவர்களின் அனுபவமின்மையும் தான் எனக் கூறப் படுகின்றது. அதாவது சந்தேகிக்கப் பட்ட 8 நபர்களில் 5 பேர் ஒரே நாளில் விமானநிலையத்திலிருந்து நழுவிச் சென்றுள்ளார்கள் எனவும் இவர்கள் அனைவரும் இலண்டனின் தேசத்துக்கு விரோதமான தீவிரவாதிகளின் பட்டியலில் உள்ளவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் இந்நபர்கள் விமான நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற பின் எங்கு செல்வார்கள் இவர்களது திட்டம் என்ன என்பவற்றைக் கண்டு பிடிக்க இயலாது என பிரிட்டனின் எல்லைப் பகுதியின் காவலர்களால் எச்சரிக்கப் பட்டுள்ளது.
இந்நபர்களைத் தப்பிக்க விட்ட விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப் படவுள்ளது.










