யாழ்.மாவட்டத்தில் திடீரென நிற்கும் மின்சாரம்! பாதிப்படையும் மின்சாதனங்கள்!!

யாழ். மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்தும் திடீர்,திடீர் என மின்சாரம் தடைப்படுவதன் காரணமாகவும் பின் திடீரென அதி வலு கொண்ட மின்சாரம் வருவதன் காரணத்தினாலும் பல மின் பாவனையாளர்களது பெறுமதி
வாய்ந்த மின்சார உபகரணங்கள் பழுதடைந்திருப்பதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு மேலாக யாழ்.மாவட்டத்தில் நாள் ஒன்றிற்கு பல தடவைகள் மின்சாரம் தடைப்பட்டு பினனர் திடீரென மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக யாழ். மாவட்டத்தில் பல பாகங்களிலும் உள்ள மின் பாவனையாளர்களது தொலைக்காட்சிப்பெட்டி, கணினி, குளிர்சாதனப்பெட்டி, வானொலி உள்ளிட்ட பல்வேறு பெறுமதி வாய்ந்த மின்சாதனப்பொருட்கள்
பழுதடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் மின்சார பிரச்சினை பல்வேறு விதமாக வந்துகொண்டிருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் தவறாமல் மின்சாரம் நாள் கணக்கில் தடைப்படுகின்ற போதும் மாத முடிவில் அதிகரித்து தொகையைக்கொண்ட மின் பட்டியலே மின் பாவனையாளர்களுக்கு கிடைப்பதாகவும் மின் பாவனையாளர்கள்
தெரிவிக்கின்றனர்.

குறித்த மின்சார தடை தொடர்பில் யாழ்.மின்சார சபையிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொது தற்போது யாழ் மாவட்டத்தில் அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றது இதனால் உயர் அழுத்த மின்உற்பத்தியை
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களுக்கும் எடுத்துச்செல்லம் மின்கம்பங்கள், மின் கம்பிகள் இடம் மாற்றப்படுகின்றது இதனாலேயே திடீர் திடீர் என மின்சாரத்தினை தடைசெய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

Special Recent Posts

சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்

சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்

May 19th, 2013

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட [...]

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை

May 19th, 2013

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத[...]

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை

May 19th, 2013

பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரி உட்பட பெரும்புள்ளிகளில் வீட்டை தாக்க தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள[...]

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

May 19th, 2013

கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து[...]

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

May 19th, 2013

மனைவியுடனான தகராறில் விரக்தி அடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஏர்வாடி [...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*