இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. குர்பான் என்னும் பலி கொடுக்கும் கடமையை நிறைவேற்றுவதற்காக பல இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை விலைக்கு வாங்குவதில் மும்முரமாக உள்ளனர்.

’சல்மான்’ என்று நாங்கள் பெயரிட்டு செல்லமாக வளர்த்த இந்த ஆட்டின் உணவுக்காக நாங்கள் தினந்தோறும் 85 ரூபாய் வரை செலவு செய்து வந்திருகிறோம். மேலும், அதன் ரோமத்தில் உள்ள ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துக்காகவே இதை நாங்கள் குறிப்பிட்ட விலைக்கு யாராவது வாங்கிச் செல்வார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார், முஹம்மது நிஜாமுதீன்.