கவிதை Subscribe to கவிதை
உன் வரவுக்காய்..
உன் நினைவுகளில் நனைந்தபடி… இழக்கும் ஒவ்வொரு மணித்துளிகளும் உன் வரவுக்காய் காத்திருந்து கரைந்து போகின்றது கண்ணீர் துளிகளாய்..! Share
ஏனடி பெண்ணே…!
ஏனடி பெண்ணே உன் கால்கள் தடம் மாறுது உன் ஜீவன் எப்போதுமே என்னோடு உறவாடுது (ஏனடி பெண்ணே ….) முதல் பார்வை நீயும் தந்து என் மனசில் வந்தாயே முதல் பாவை நானும் கண்டு உன் உயிரில் நனைந்தேனே முதல் முத்தம்… Read more
இனி வேண்டாம் பெண்ணே
என் முடிவொன்று பிழையாயிற்று பிதற்றுகிறேன் பிறந்ததால் பிள்ளைநிலாவொன்று பொய்த்திற்று பொறி சிதற மனம் கலங்க பெண்மையில் நான் வைத்த நல்லெண்ணம் நாணங் கொள்கின்றது என்ன இந்தக் காதலோ ரணமாய்க் கொல்கின்றது இனி வேண்டாம் பெண்ணே இரண்டாம் வாழ்க்கை Share
வாழும் காலம் வரை உன்னோடு வாழ ஆசை….
என்னோடு சிறு கோவங்கள் உன் மீது இருந்தாலும். . என் மனதோடு இருப்பது நீயல்லவா கண்ணோடு சில துளிகள் இருந்தாலும் என் கனவோடு இருப்பது நீயல்லவா இருந்தும் உன்மேல் கோவம் உன்னை வெறுப்பதற்கு இல்லை உன்மேல் உள்ள அன்பினால் மட்டுமே Share
இல்லை…!
பெண்ணே… நீ என் இதயத்தை திருடவில்லை.., உனக்கு சொந்தமானதை எடுத்துக் கொண்டதற்கு பெயர் திருட்டல்ல..! Share
!!! உணர்ந்து கொள் என் உத்தமியே !!!
உணர்வை ஊக்குவிக்க அருகில் உண்மை நட்பிருக்க உள்ளம் மகிழ்விக்க உத்தமி நீயில்லையேன்றால் உதறிவிடுவேன் என்று எண்ணினாயா உன் நினைவை உதிரம் உறையும் வரை உதறி விட மாட்டேன் உணர்ந்து கொள் என் உத்தமியே உயிர் நீயென்றானபின் உனை மறக்கும் உள்ளம் எனக்கில்லை… Read more
யாரறிவார் இவள் மனதை?
வரம் ஒன்று தந்தான் இறைவன் இலவசமாக அழுகையும் கண்ணீரையும் கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய காலத்தில் – வாழ்க்கையெனும் பயணமே கனவாகியது எனக்கு…. வேதனை என்ற சொல்லுக்கு வரை விலக்கணம் தனைக் கூறியது கன்னங்களின் ஓரம் காய்ந்துபோன கண்ணீர்த்துளி.. எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும்… Read more
போகும் நீ போ….
அன்பை கொஞ்சம் நீ தந்தாய்… அதில் அதிகம் நான் நனைந்தேன். அதை அதிகம் நான் தரவே தகர்த்து விட்டு போறாய். தாகித்தழுகின்ற இதயத்தை… பிடிக்காத உறவை பிரிக்க சிலர் சொல்வார்கள். வேண்டாமென்று… சிலர் செய்து பிரிவை தருவார்கள். நீயும் இதிலுள்ளவரே! போங்கள்…… Read more
உன்னோடு ஒரு நாள்
இதமான இளம்பணி நேரம் இறுக்கி மூடிய விழிகள் இதய பந்தியில் நினைவுகளெல்லாம் கனவும் கொஞ்சம் நிஜத்தின் நிழலும் கொஞ்சம் சற்று தூக்கத்தை துரத்தி விட்டு இவைகள் வந்தமர்ந்தன இளவஞ்சியின் பாத தடங்கல் பச்சை புல்வெளியில் பூர்த்திருந்த பணிப்பூக்களில் பதம் பதிந்து ஓவியம்… Read more
காதலர் தின வாழ்த்துகள்
காதலில் காதலாகி காதலோடு வாழும் காதல் நெஞ்சங்களுக்கு காதலர் தின வாழ்த்துகள் Share





