இலங்கை Subscribe to இலங்கை
தேடப்பட்ட வந்த பாகிஸ்தான் பிரஜை, சுங்க அதிகாரிகளால் கைது
பாகிஸ்தானில் இருந்து உருளைகிழங்கு கொள்கலனில் கருக்கலைப்புக்காக பயன்படுத்தப்படும் மருந்துக் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரஜையான இன்று நண்பகல் 12.30 மணியளவில் புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 27ஆம்… Read more
தேசிய அடையாள அட்டையில் இரு மொழி!
தேசிய அடையாள அட்டையில் இரு மொழி அமுலாக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் தேசிய அடையாள அட்டையில் இருக்கும் விபரங்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் காணப்படும். Share
180 அலகுகள் மின் பாவனையாளர்களுக்கு 25% எரிபொருள் கட்டண கழிவு!
மாதம் ஒன்றிற்கு 61 தொடக்கம் 180 அலகுகள் வரை மின்சாரத்தை உபயோகிக்கும் மின் பாவனையாளர்களுக்கு 25% எரிபொருள் கட்டண கழிவு நிவாரணமாக வழங்கப்படும் என மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 60 அலகுகளுக்கு குறைவாக மின் பயன்படுத்தும்… Read more
குழந்தைகளை கைவிட்டு வெளிநாடு செல்லவிருந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்
குழந்தைகளைக் கைவிட்டு மத்திய கிழக்கு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லவிருந்த நான்கு பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தெரிவித்தார். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை கைவிட்டு விட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லவிருக்கின்றார்கள் என்கின்ற… Read more
வாகரை பிரதேச சபையின் வாகனத்தில் மோதுண்டு மாணவன் படுகாயம்
மட்டக்களப்பு வாகரை பிரதேச சபையின் வாகனத்தில் மோதுண்டு மாணவனொருவன் படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வெருகல் துவாரகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கோட்டமட்ட விளையாட்டு நிகழ்ச்சியில் பங்குபற்றிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மடுப்பாலத்தடியில் வைத்து வாகரை பிரதேச சபையின் வாகனத்துடன்… Read more
வெருகல் பிரதேசத்தில் மூன்று நாட்களாக உயிரிழந்து கிடந்த வயோதிபரின் சடலம் மீட்பு
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசத்தில் மூன்று நாட்களாக மரத்தடியில் உயிரிழந்து கிடந்த வயோதிபரின் சடலத்தை வெருகல் பொலிஸார் மீட்டனர். வெருகல் பூமரத்தடிச்சேனையைச் சேர்ந்த 76 வயதுடைய பொன்னையா அரசரெட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்று செவ்வாய்கிழமை அவ்வழியால் வந்த சிறுமி… Read more
பெண்கள், குழந்தைகள் விற்பனையில் உலகின் மிகப் பிரதானமான நாடாக திகழும் இலங்கை!
மனித உயிருக்கான மரியாதை அற்றுப்போயுள்ளது. பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர்; குழந்தையை வீசி எறிகின்றனர். பெண்கள், குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் மிகப் பிரதானமான நாடாக இலங்கை திகழ்கின்றது என்று மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மனமேந்திர தெரிவித்தார். காலியில்… Read more
ஆஸ்திரேலியாவிலிருந்து கடந்த சில மாதங்களில் 819 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
அவுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.போலியான… Read more
மோட்டார் சைக்கிளில் ஆடை சிக்கி நடுவீதியில் தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்:
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஆடை மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கியதால் பெண்ணொருவர் நடுவீதியில் தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவே இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்,… Read more
அம்பாறையில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை
அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மத்தியமுகாம் 4ஆம் கொளனியைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சடலமானவர் 30 வயதான கே.புரிசோத்தமன் என அடையாளம்… Read more





